ஞாயிறு, 11 அக்டோபர், 2015

சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் – தெரிந்து கொள்வோம்

சோதனைக் குழாய் குழந்தைகள் உருவாகும் விதம் – தெரிந்து கொள்வோம்

E-mail Print PDF

வெளிச் சோதனை முறை கருக்கட்டல், அல்லது ஆய்வுகூடச் சோதனை முறை கருக்கட்டல் என்பது உடகுக்கு வெளியாக பெண் உயிரின் கரு முட்டையானது ஆன் விந்துடன், இணைந்து கருக்கட்டல் நிகழும் செயல்முறையாகும்.

பொது வழக்கில் ஆங்கிலத்தில்,  இதனை சுருக்கமாக IVF (In vitro fertilization) என அழைப்பர். அதாவது இன் விட்ரோ (in vitro) எனப்படும் செயத்கைக் கல முறை மூலம் செய்யப்படும் கருக்கட்டல் ஆகும்.

இவ்வாறு கருமுட்டையுடன், விந்தை இணைத்து, செயற்கையாக உருவாக்கப்படும் கருக்களை ஒரு பெண்ணின்  கருப்பையில் தக்கமுறையில் வைப்பதன் மூலம் அக்கரு வளர்ந்து முளையமாலி அப்பெண், ஒருகுழந்தையைப் பெற்றுக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாம்.

பொதுவாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வமிருந்தும், இயற்கையாக சில சிக்கல்களைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு, இம்முறையினால் குழந்தை பெற்றுக் கொள்ள உதவலாம்.

இம்முறையால் பிறக்கும் குழந்தையை சாதாரண பேச்சு வழக்கில் "சோதனைக் குழாய்க் குழந்தை" (Test tube baby) என அழைப்பார்கள். (இருப்பினும் சோதனைக் குழாய் என்பது உயிரியல், வேதியல் ஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படும்  கண்ணாடி அல்லது நெகிழியினாலான குழாய் போன்ற அமைப்புடைய பொருட்களாகும்.

ஆனால் பொதுவாக வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பயன்படுத்தப்படும் உபகரணம் தட்டையான Petri dish அன அழைக்கப்படும் உபகரணமாகும்).

சோதனைக் குழாய் குழந்தை முறையைக் கண்டுபிடித்த பிரித்தானிய அறிவியலாளர் ராபர்ட் எட்வர்களுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

1978 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி, உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன், இங்கிலாந்தில் பிறந்தது.

இன்றைய நிலையில், கருத்தரிக்க இயலாத தம்பதியர் சோதனைக் குழாய் முறையில் ஒன்று முதல் 5 நாட்களிலேயே கரு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நவீன வசதிகள் உள்ளன.

தற்போது சோதனைக் குழாய் முறை மூலம் குழந்தைகளை பெறுவது என்பது சாதாரண நிகழ்ச்சி ஆகிவிட்டது. பெண்களுக்கு கருமுட்டை உற்பத்தி 25 வயதுகளிலே குறைந்து போவதாகவும், 30 வயதுக்கு மேல் திருமணமாகும் பெண்கள் சோதனைக் குழாய் சிகிச்சை மூலம் குழந்தைகள் பெறவேண்டிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பது பற்றியும் கேட்டப் போது இதுப் பற்றிய விளக்கத்தை டாக்டர் கே.எஸ்.ஜெயராணி அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்.

"இயல்பாக கர்ப்பம் தரிப்பது எப்படி நிகழ்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?" எனும் கேள்வியோடு தொடர்கிறார்...

மனைவியின் சினைப் பையிலிருந்து கருமுட்டை வெளிப்பட்டு கருக்குழாய் வழியாக வரும் -- கணவன் - மனைவி உடல் சேர்க்கையால் கணவரிடமிருந்து உயிரணு வெளிப்படும் -- இரண்டும் கருக்குழாயில் கலந்து சினைமுட்டையாகி கருப்பைக்கு வந்து பதியமாகும். இதுதான் இயல்பான கருத்தரிப்பு.

சோதனைக் குழாய் முறையில் உயிரணுவையும் கருமுட்டையையும் உடலிலிருந்து வெளியே எடுத்து, சேகரித்து ஆய்வகத்தில் ஒன்றாக்கி, பிறகு கருப்பைக்குள் செலுத்தி பதியமாக்கி கருத்தரிக்கச் செய்வார்கள். கருமுட்டையையும் உயிரணுவையும் ஒன்றாக்கி, கருப்பைக்குழாய், பெண்ணின் உடலுக்குள் செல்லும் செயலாக்க முறையை, வெளியே ஆய்வகத்தில் செய்வது சோதனைக் குழாய் முறையாகும்.

இது படிப்படியாக ஐந்து கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது.
1. கருமுட்டையைத் தூண்டி முதிரச் செய்து விடுவித்தல்.

2. முதிர்ந்து வெளியாகும் கருமுட்டையைச் சேகரித்தல்

3. உயிரணுக்களைச் சேகரித்து அதில் தரமானவைகளை மட்டும் தனியே பிரித்து எடுத்தல்

4. ஆய்வகத்தில் உயிரணுவையும் முட்டையையும் ஒன்றாகச் சேர்த்து - கருவாக்கம் செய்து - கரு உயிரை வளர்த்தல்

5. கரு உயிரை கருப்பைக்குள் செலுத்துதல்

இச்செயல் முறையை ஒன்றன் பின் ஒன்றாக விளக்கமாகப் பார்ப்போம்
முதலில் பெண்ணின் சினைப்பை, ஹார்மோன் போன்றவை பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு பிரத்தியேகமான ஹார்மோன் ஊசியைப் போட்டு முட்டையை முதிர்ந்து வரச் செய்ய வேண்டும். முட்டை முதிர்ந்து வரும் நேரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும். சரியான நேரத்தில் மயக்க மருந்து கொடுத்து, அல்ட்ரா சவுண்ட் காட்டும் வழியில் சிறிய ஊசியைச் செலுத்தி, கருமுட்டையை வெளியே எடுத்து சேகரிக்க வேண்டும். 12 முதல் 15 முட்டைகளைச் சேகரித்து, கணவரின் உயிரணுவோடு கலக்கச் செய்வார்கள். ஏதாவது ஒரு உயிரணு கருமுட்டையை துளைத்து, கருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து சினை முட்டையாக மாற்றும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவ்வாறு நிகழாவிட்டால், முட்டையின் மேல் துளையிட்டு பலகீனமாக்கி, தரமான ஒரு உயிரணுவைப் பிடித்து, முட்டையின் பலகீனப் பகுதியோடு உள்ளே புகுந்திடச் செய்வார்கள்.

பின்பு அவற்றை செயற்கை கருப்பைப் போன்ற இங்குப்பேட்டரில் (Incubator) வைத்து கருத்தரிக்கிறதா? செல்கள் பிரிகிறதா? சரியா வளர்கிறதா? என்று கண்காணிப்பார்கள். பலசெல்நிலைக்கு வந்து, கரு உயிர் ஆனா பிறகு கருப்பைக்குள் செலுத்துவார்கள். இதற்கு இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆகும். பின்பு கரு உயிர் இங்கு பதியமாகும். அதை அல்ட்ரா சவுண்ட், ரத்தப் பரிசோதனை மூலம் உறுதி செய்து, பெண் கருத்தரித்து விட்டதை அறிவிப்பார்கள்.

(சோதனைக் குழாய் கருவாக்கம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சில நாளில் அதைப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்த தயாராக இருக்கும் போது அந்த பெண்ணுக்கு திடீர் உடல் நலக் கோளாறோ, அத்தியாவசியப் பயணச் சூழலோ ஏற்பட்டால் அதற்கும் மாற்று வழி இருக்கிறது. கருவாக்கம் செய்யப்பட்ட சினை முட்டையை அதனுள் இருக்கும் கரு உயிரோடு திரவ நைட்ரஜெனில் மைனஸ் 196 டிகிரி வெப்பத்தில் உறையவைத்து விடவேண்டும். பின்பு அதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த முறைக்கு 'கிரையோ பிரசர்வேஷன்' (Cryo Preservatin) என்று பெயர்).

பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும் கரு உயிரில் ஒன்று பதியமாகாமல் போனாலும், இன்னொன்று பதியமாக வேண்டுமென்பதற்காக ஒன்றுக்கு மேற்பட்டவை கருப்பைக்குள் செலுத்தப்படும். சில தருணங்களில் இரண்டுமே பதியமாகி, இரண்டு குழந்தைகள் வளரத் தொடங்கிவிடும்.

இதுதான் சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் செயலாக்க வழிமுறையாகும் என்று விளக்கி முடித்தார் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.

மேலும் விளக்கமாக:
பயன்பாடு

பெண்களில் மலட்டுத் தன்மைக்கு பலோப்பியன் குளாயில் இருக்கும் குறைபாடு காரணமாக இருக்கும் வேளைகளில் கருக்கட்டல் செயல்முறை கடினமாகிவிடும். அதேபோல் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு விந்துக்களின் தரம் குறைவாக இருந்தாலும் கருக்கட்டல் கடினமாகும்.


இப்படியான நிலைகளில் இம்முறையில் செயற்கையாக, உடலுக்கு வெளியாக கருக்கட்டல் நிகழ்த்தப்படும். ஆணின் விந்தின் தரம் குறைபாடுள்ளதாக இருப்பின், விந்தானது நேரடியாக முட்டையினுள் செலுத்தப்படும். இதனை குழியமுதலுருவுக்குள்ளான விந்து ஊசிமூலம் ஏற்றும் முறையெனலாம் (intracytoplasmic sperm injection - ICSI).

ஆரோக்கியமான முட்டை, கருக்கட்டும் திறன் கொண்ட விந்து, கருத்தரிப்பை ஆரோக்கியமாக ஏற்கக் கூடிய கருப்பை என்பன இம்முறை வெற்றியளிப்பதற்கு முக்கியமாகும். இவைகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது மூன்றும் தரம் குன்றி அமைந்துவிட்டால் வேறு பல முறைகள் கையாளப்பெறுகின்றன. இம்முறை மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதனால், விலை குறைந்த முறைகள் வெற்றி அளிக்காத நிலையிலேயே இம்முறை பயன்படுத்தப்படும்.

இம்முறையில் சிலசமயம் முட்டை வழங்கும் பெண்ணும், கருக்கட்டலின் பின்னர் கருவைத் தாங்கி கருத்தரிப்புக்கு உட்படும் பெண்ணும் வேறு வேறாக இருப்பர். குழந்தை தேவையான பெண்ணில் ஆரோக்கியமான முட்டைகள் பெறப்பட முடியாதெனின், வேறொரு பெண்ணிடம் முட்டைகள் பெறப்பட்டு, கருக்கட்டலின் பின்னர், குழந்தை தேவையான பெண்ணின் கருப்பையில் முளையம் உள்வைத்து பதிக்கப்படும்.

இதனால் மாதவிடாய் நிறுத்தம் ஏற்பட்ட பெண்களும்கூட குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. குழந்தை தேவையான பெண்ணின் கருப்பை கருவைத் தாங்கும் வல்லமை அற்றதாகக் கருதப்படின், அப் பெண்ணின் முட்டை கருக்கட்டலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், வேறொரு பெண்ணின் கருப்பையில் பதித்து, குழந்தை பிறப்பின் பின்னர் மற்ற பெண்ணிடம் குழந்தை கையளிக்கப்படும்.

ஆண்களிலும் குழந்தை தேவையான ஆணின் விந்துக்கள் ஆரோக்கியம் அற்றதாக இருக்கும் வேளையில் வேறொரு ஆண் விந்து வழங்கியாக இருக்க முடியும். ஆனால் சில நாடுகளில் இம்முறைக்கு கணவனின் விந்தே பெற முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது. அதேவேளை செயற்க விந்தூட்டல் முறைக்கு விந்து வழங்கி ஒருவரிடமிருந்து விந்து பெறப்பட அனுமதிக்கப்படுகிறது.
50 வயதைக் கடந்த பெண்களும் இம்முறையால் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.


செயல்முறை
பெண்ணில் முட்டையானது பாலோப்பியன் குழாயிலேயே வைத்து உறிஞ்சப்பட்டு, கருக்கட்டலில் பயன்படுத்தப்படலாம் எனினும், அப்படி செய்யும்போது குறைந்த அளவிலேயே வெற்றியளிப்பதாக உள்ளது. அதனால் பெண்ணுக்கு வளரூக்கிகளை அளித்து, அதன் மூலம் சூலகத்தின் தொழிற்பாட்டை கூட்டி, அதிக எண்ணிக்கையான முட்டைகள் உருவாகச் செய்து, பின்னர், அம்முட்டைகளை சூலகத்திலிருந்து பிரித்தெடுத்து, உடலுக்கு வெளியாக ஒரு நீர்ம வளர்ப்பூடகம் ஒன்றில் வைத்து, அவற்றுடன்  ஆணில் இருந்து பெறப்படும் விந்து பாய்மத்தைச் சேர்ப்பதனால், முட்டையுடன் விந்து கருக்கட்டச் செய்யப்படுகிறது.


பின்னர் கருக்கட்டலுக்கு உட்பட்டு கலப்பிரிவுக்குள்ளாகும் (உயிரணுப்பிரிவுக்குள்ளாகும்) கரு முட்டையானது, பெண்ணின் கருப்பைக்குள்  செலுத்தப்பட்டு, பெண்ணின் வெற்றிகரமான கருத்தரிப்புக்கு உதவி குழந்தையாக உருவாவதற்கு ஏதுவாகின்றது.


சோதனைமுறையின் வெற்றி வாய்ப்பு
இந்த சோதனை முறையில், வெற்றி வீதம் என்பது விரும்பத்தக்க விளைவைக் கொடுக்கும் வீதத்தைக் குறிக்கும். கணக்கிடும் முறையின் அடிப்படையில் இது கருத்தரிப்பு வீதத்தை, அல்லது உயிர் வாழும் குழந்தைகளின் பிறப்பு வீதத்தைக் கொடுக்கின்றது.


கருத்தரிப்பு வீதம்
கருத்தரிப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில், முட்டைகளைப்பெற்று வெளியே கருக்கட்டிய  பின்னர், முட்டைகள் பெண்ணின் கருப்பையினுள் வைக்கப்பட்ட பின்னர், வெற்றிகரமாக கருத்தரிப்பு ஏற்படும் வீதத்தைக் குறிக்கும்.


அதாவது, கருத்தரிப்பு சோதனையில் கருவானது கருப்பையில் பதிந்திருப்பதை உறுதிப்படுத்துவதையே இது குறிக்கும். குழந்தையின் இதயத் துடிப்பு கருத்திற்கெடுக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு இதயத் துடிப்பு கருத்தில் கொள்ளப்படுமாயின் அது, 'வாழும் பிறப்பு வீதம்' (Live Birth Rate) எனக் கருதப்படும். பெண்களின் வயது அதிகரிக்கையில் கருத்தரிப்பு வீதம் குறைந்து செல்லும். அதேபோல் உறைய வைக்கப்பட்ட முட்டைகளை கருக்கட்டச் செய்யும்போது, புதிதாக எடுக்கப்படும் முட்டைகளை கருக்கட்டச் செய்வதிலும் பார்க்க குறைந்த கருத்தரிப்பு வீதத்தையே அவதானிக்க முடிகின்றது.

சிறந்த உயிரித் தொழில்நுட்பம் காரணமாக இந்த கருத்தரிப்பு வீதமானது அண்மைய வருடங்களில் அதிகரித்துள்ளது.  கனடாவில் உள்ள அமைப்பொன்று தற்போதைய இம்முறையால் ஏற்படும் கருத்தரிப்பு வீதம் 35% எனக் குறிப்பிட்டுள்ளது. பிரான்ஸில் செய்யப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின்படி இந்த வெளிச் சோதனை முறைக் கருக்கட்டலை முயற்சி செய்த பின்னர் 40% மான பெற்றோர்கள் இந்த பரிசோதனை முறையின்போதும், மேலும் 26% மான பெற்றோர்கள் இம்முறையை இடை நிறுத்திய பின்னரும் குழந்தையை பெறுகின்றனர்.

இச்சோதனை முறையை இடை நிறுத்திய பின்னர் பெறப்படும் குழந்தைகளில் 46% குழந்தைகளை தத்தெடுப்பதன் மூலமும், 42% தன்னிச்சையாக நிகழும் கருத்தருப்பு மூலமும் ஏற்படுகின்றது. இச்சோதனையை இடை நிறுத்தப்பட்ட பின்னர் தன்னிச்சையாக நிகழும் கருத்தரிப்புக்குக் காரணம் வளரூக்கிகள் மூலகம் சூலகத்தின் தொழிற்பாடு கூட்டபட்டிருப்பதின் பின்விளைவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.


வாழும் பிறப்பு வீதம்
வாழும் பிறப்பு வீதம் என்பது சோதனைக்குழாய் முறையில் நடத்தப்படும் மொத்த சோதனைகளில் எத்தனை சதவீத சோதனையில் உயிருள்ள குழந்தை பிறப்பு ஏற்படுகின்றது என்பதைக் குறிக்கும். இந்தக் கணக்கெடுப்பில் கருச்சிதைவு, செத்துப் பிறப்பு என்பன கருத்தில் கொள்ளப்படுவதில்லை.


அத்துடன் இரட்டைக் குழந்தைகளோ, அல்லது மூன்று குழந்தைகளோ பிறந்தால்கூட, அதனை ஒரு குழந்தை பிறப்பு என்றே கணக்கில் கொள்ளப்படும்.

வெற்றி தோல்விக்கான காரணிகள்
இந்த சோதனை முறை கருக்கட்டலின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கியமான காரணியாக பெண்ணின் வயது இருக்கின்றது. பெண்ணின் வயது 23-39 ஆக இருப்பதே இம்முறையில் கருத்தரிப்பு நிகழ பெரிதும் உகந்த வயதாகக் காணப்படுகின்றது, அத்துடன் கருத்தரிப்பு நிகழாமல் இருந்த காலம், கருமுட்டை தூண்டும் வள்ரூக்கியின் (FSH - Follicle Stimulating Hormone) அளவு, முட்டைக்குழியங்களின் எண்ணிக்கை என்பனவும் வெற்றி தோல்வியைப் பாதிக்கின்றன..


மன அழுத்தம்
2005 ஆம் ஆண்டில் சுவீடனில் 166 பெண்களில், வெளிச் சோதனை முறை கருக்கட்டல் செயல்முறைகள் ஆரம்பிக்க ஒரு மாதம் முதலில் இருந்து தொடங்கி செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மன அழுத்தத்திற்கும்  கருக்கட்டலில் கிடைக்கும் விளைவிற்கும் நேரடித் தொடர்பு எதுவும் இல்லை என அறியப்பட்டது.


எனவே இதனை இந்த சோதனை மூலம்குழந்தை பெற்றுக் கொள்ள வருபவர்களிடம் கூறும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனாலும், இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலின் விளைவானது மன அழுத்தத்தையும், மனத்தளர்ச்சியையும் உருவாக்க வல்லது. இந்த முயற்சியில் ஏற்படும் செலவீனங்கள் பற்றிய கவலைகூட வசதி குறைந்த பெற்றோர்களுக்கு இவ்வகையான நிலைமையைத் தோற்றுவிக்கக் கூடும். அதேவேளை, இந்த முறையைத் தவிர்த்து இருக்கும் பெற்றோருக்கு தொடர்ந்து குழந்தையற்று இருக்கும் நிலைமையே கூட மன அழுத்தம், மனத்தளர்ச்சி போன்ற சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடும்.


குத்தூசி மருத்துவம்
இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற பல மருத்துவர்களின் பார்வையில், வெளிச் சோதனை முறை கருக்கட்டலுடன்,  குத்தூசி மருத்துவம் சேர்த்து செய்வது நல்ல பலனைத் தரக் கூடியது.. பிரித்தானிய மருத்துவ ஆய்விதழில் வந்த ஒரு கட்டுரையின்படி, வெளியே  கருக் கட்டல் மூலம் பெறப்பட்ட முளையம், பெண்ணின் கருப்பையினுள் மாற்றம் செய்யப்படும்போது, இந்த குத்தூசி மருத்துவமும் சேர்த்து செய்யப்படுவதால், கருக்கட்டலில் வெற்றி கிடைக்கும் அளவும், கருத்தரிப்பு காலத்தில் சிசுவின் விருத்தியும், உயிர் குழந்தை பிறக்கும் நிலையும் அதிகரிக்கும்.


குத்தூசி மருத்துவத்தின் நான்கு முக்கிய பொறிமுறைகள், இவ்வாறான வெற்றிகளுக்குக் காரணமாகின்றன.
நரம்பியல் சார்ந்தஅகஞ் சுரப்பியியலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்.
கருப்பை, சூலகங்களுக்கான குருதி ஓட்டம் அதிகரித்தல்.
உயிரணு சைகைகளைக் கொண்ட cytokine எனப்படும் னுரத மூலக்கூற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்.
மன அழுத்தம், மனக் கலக்கம், மனத்தளர்ச்சி என்பவற்றைக் குறைத்துக் கொள்ளலாம்.
கருமுட்டைகளை செயற்கை முறையில் பிரித்தெடுக்கும்போது, வலியைப் போக்குவதற்காக வழங்கப்படும் வலி நிவாரணிகளுக்குப் பதிலாக, மின் குத்தூசி மருத்துவ முறையை பயன்படுத்துவதால், குறைந்த செலவினத்தை கொண்டிருப்பதுடன், குறைந்த காலத்திலேயே நல்ல மருத்துவ விளைவுகளைப் பெறலாம்.


வேறு காரணிகள்
புகைத்தல், புகைப்பிடித்தல் இம்முறையில் வாழும் பிறப்பு வீதத்தில் 34% வீழ்ச்சியைக் கொடுப்பதுடன், கருத்தரிப்பில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை 30% ஆல் அதிகரிக்கும்.
உடல் நிறை குறியீட்டெண் 27 ஐ விட அதிகரிக்கும்போது, ஒப்பீட்டளவில் 20-27 டல் நிறை குறியீட்டெண் உள்ளவர்களைவிட, வாழும் பிறப்பு வீதமானது 33% ஆல் குறைகின்றது. அத்துடன் கருத்தரித்த பெண்களின் உடற் பருமன் அதிகரிப்பின், குழந்தையில் அசாதாரண நிலைகள், அல்லது பிறவி ஊனம், கருச்சிதைவு, கருத்தரிப்பு நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், குழலியக்குருதியுறைமை  போன்றனவும், குழந்தை பிறப்பின் போது வேறு பிரச்சனைகளும் ஏற்படலாம். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 19-30 என வேறொரு அறிக்கை சொல்கின்றது.
வெளிச்சோதனை முற கருக்கட்டலுக்கு முன்னரே பலோப்பியன் குளாய் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பின், பலோப்பியன் குழாயினுள் குருதி சேர்ந்து வேண்டாத விளைவுகளைத் தரும்.
முதல் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கிட்டியிருப்பின், மீண்டும் வெற்றி கிட்டுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.


மதுசாரம், காஃவின் உள்ளெடுத்தல் குறைவாயின் வெற்றி கிட்டும் வீதம் அதிகம்.
டி.அன்.ஏ துண்டாகும் தன்மை (DNA fragmentation] அளவு
கருப்பையினுள் வைக்கப்படும் முளைய எண்ணிக்கை
பயன்படுத்தப்படும் விந்தின் தரம்.
தன்னுடல் தாக்குநோய் கருப்பையினுள் செலுத்தப்பட்ட கருவானது அங்கே நிலைநிறுத்தப்படுவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகின்றது.


கருத்தரிப்பு வீதத்தை ஆஸ்பிறின் பயன்பாடும் குறைக்கின்றது.


சிக்கல்கள்
இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் பல படிநிலைகளில் சிக்கல்கள் ஏற்படலாம். அளவுக்கதிகமான கருமுட்டை தூண்டலால் பிரச்சனைகள் வரலாம். இதனால் சூலகங்கள் வீங்கி வலியைக் கொடுக்கலாம். 30% மான பெண்களில் இது சிறியளவில்/மிதமான அளவில் காணப்படும். இந்த வெளிச் சோதனை முறை கருக்கட்டலில் உள்ள முக்கியமான சிக்கல் பல குழந்தைகள் ஒன்றாக உருவாதலாகும். இம்முறையின் வெற்றியினைக் கருத்திற்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முளையங்கள் பெண்ணின் கருப்பையில் பதிய வைக்கப்படுவதுண்டு. அவ்வேளையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாதலுக்கான சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது.

பெண்ணின் தரமற்ற முட்டையை வளமாக்கி செயற்கை முறையில் கருவூட்டல் – மரபணு சாதனை

பெண்ணின் தரமற்ற முட்டையை வளமாக்கி செயற்கை முறையில் கருவூட்டல் – மரபணு சாதனை

E-mail Print PDF
செயற்கை கருவூட்டல் சிகிச்சை பெறும் தம்பதிகளுக்கு நல்ல செய்தி..  முட்டையில் இருந்து முட்டைக்கு! மரபணு சாதனை

பெண்ணின் கரு முட்டை போதிய தரமாக இல்லை என்றால், வேறு ஒரு பெண்ணிடம் இருந்து கரு முட்டையைத் தானமாகப் பெற்று குழந்தைப்பேறு அடையவைப்பதுதான் ஒரே தீர்வாக இதுவரை இருந்தது. இதில் குழந்தையின் மரபணுவில் தாயின் மரபணுவுக்குப் பதில் ‘அந்த வேறு ஒருவரின் மரபணுதான் இருக்கும். தன் வயிற்றில் வளர்த்துப் பெற்றாலும், அது வேறு ஒருவரின் குழந்தை என்ற மனநிலை பெண்களிடம் இருந்தது. அந்தக் குறைபாட்டை நீக்குவதற்காக, சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர் என்ற புதிய தொழில்நுட்பம் வந்துவிட்டது.

இது குறித்து சென்னை மிராக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரொடக்டிவ் சென்டரின் மருத்துவர் டாக்டர் பி.எஸ்.ஆர்.மூர்த்தியிடம் பேசினாம். ‘‘ஒரு பெண்ணின் சினைப் பையில் 15 வயதில் தொடங்கி கிட்டத்தட்ட 50 வயது வரை கரு முட்டைகள் உற்பத்தியாகின்றன. பெண் குழந்தை பிறக்கும்போதே, அதன் சினைப்பையில் 10 லட்சத்துக்கும் அதிகமான சினைத் துகள்கள் இருக்கும். அந்தக் குழந்தை, பருவம் அடைந்ததும் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் நான்கு சினை துகள்கள் முட்டையாக வளரத் தேர்ந்து எடுக்கப்படும்.

இதில் ஒன்று மட்டும் முழுமையான வளர்ச்சி பெறும். மற்றவை வெளியேற்றப்படும். மாதந்தோறும் ஒரே ஒரு கரு முட்டை எனும்போது, ஒரு பெண்ணின் கருத்தரிப்பு காலம் முழுவதற்கும் சேர்த்தே 500 சினைத் துகள்கள் போதுமானது. ஆனால் அளவுக்கு அதிகமான சினைத் துளைகள் இருந்தும், அவை பயன்படுவது இல்லை. வயது கூடினாலும் முட்டையின் தரம் குறைந்துகொண்டே போகும். 40 வயதான பெண்ணுக்கும் 20 வயதான பெண்ணுக்கும் உற்பத்தியாகும் முட்டைகள் ஒரே தரத்தில் இருப்பது இல்லை.

சில பெண்களுக்கு இயற்கையாகவே கரு முட்டை தரமாக இருப்பது இல்லை. என்ன சிகிச்சை அளித்தாலும் அவர்களால் தரமான முட்டையை உற்பத்தி செய்ய முடியாது. தரம் குறைவான முட்டைகளை உற்பத்தி செய்யும் பெண்களுக்கு, கருத்தரிப்பது மிக மிகச் சிரமம். அப்படியே கருத்தரித்தாலும், கர்ப்பத்தின் தரமும் குறைவாகவே இருக்கும். இந்த நிலையில்தான், தானமாகப் பெறப்படும் முட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி பெண்களுக்கு ஆலோசனை வழங்குவோம். தானமாக பெறப்பட்ட முட்டையைக் கருத்தரிக்கச் செய்து, குழந்தைப்பேறு அடையச் செய்தாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணு இருக்காது. இவர்களுக்கு ஆறுதலாக வந்திருப்பதுதான் சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்ஃபர்.

சமீபத்தில் பல கருத்தரிப்பு முறைகளை மேற்கொண்டு தோல்வி அடைந்த பெண் ஒருவர் எங்கள் மையத்துக்கு வந்தார். அவரது சினைப் பையில் இருந்து ஐந்து முட்டைகளை எடுத்தோம். அதில் ஒன்றைப் பலி கொடுத்து, அதில் இருந்த சைட்டோபிளாசத்தை நான்கு முட்டைகளுக்கு மாற்றினோம். இந்த நான்கு முட்டைகளையும் ஐ.சி.எஸ்.ஐ. வாயிலாக கருத்தரிக்கவைத்தோம்.

இதில் மூன்று முட்டைகள் கருக்களாக மாறின. பின்னர் நடந்த பரிசோதனையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கருக்கள் வளர்வது உறுதி செய்யப்பட்டது. 35&வது நாள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரண்டு கருக்கள் வளர்வதைக் கண்டறிந்தோம். மிகவும் கவனத்துடன் அவரது கர்ப்பத்தை வளர்த்துவந்தோம். அவரது முந்தைய சிகிச்சை முறை வரலாறு தெரியும் என்பதால், முன்கூட்டியே பிரசவம் நடப்பதைத் தவிர்க்க, 18&வது வாரத்தில் அவருக்கு ஒரு சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதனால் எந்தவித சிக்கலும் இன்றி கரு வளர்ந்தது. கடைசியில் கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு ஓர் ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

அந்தப் பெண் ஓரளவுக்குத் தரமான முட்டையை உற்பத்தி செய்ததால், அதில் ஒன்றைப் பலியிட்டு மற்ற கருக்கள் உருவாக்கப்பட்டன. இதுவே அந்தப் பெண்ணின் அனைத்து முட்டைகளும் தரம் குறைந்ததாக இருந்தால், அவரது சகோதரியிடம் இருந்து நல்ல தரமான முட்டையை எடுத்து குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். இதன்படி, தானமாகப் பெறப்பட்ட முட்டையில் இருந்து 5 முதல் 8 சதவீதம் வரையிலான சைட்டோபிளாசத்தைப் பிரித்து எடுத்து, குழந்தைப்பேறு பெற வேண்டிய பெண்ணின் தரம் குறைந்த முட்டையில் துல்லியமான அளவு சேர்த்து முட்டையின் தரத்தை உயர்த்துவோம். இப்படிப் பிறக்கும் குழந்தை பெற்றோரின் மரபணுவையே கொண்டிருக்கும்.

சம்பந்தப்பட்ட பெண் உற்பத்தி செய்யும் முட்டையின் தரம் அனைத்தும் குறைவாக இருந்தும், அவரது உடன்பிறந்த சகோதரிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முட்டையும் தரமானதாக இல்லை என்றால், வேறு ஒருவரிடம் இருந்து முட்டையைத் தானமாக பெற்றும் இந்த முறையில் குழந்தைப்பேறு அடையச் செய்யலாம். அப்படி சைட்டோபிளாஸ்மிக் இடமாற்றத்துக்கு வேறு ஒருவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட முட்டையை இந்தத் தொழில்நுட்பத்தின்படி பயன்படுத்தினாலும், அந்தக் குழந்தைக்கு பெற்றோரின் மரபணுக்கள் இருக்கும். மரபணு முட்டையின் மையப் பகுதியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். தற்போதுதான் இந்தியாவில் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகி உள்ளது. இனி இந்தியாவிலும் இந்த சிகிச்சை பிரபலமாகும் என்றார்.

முன்னாள் காதலியுடன் சேர ஆசையா? அப்ப இந்த ட்ரிக்ஸை யூஸ் பண்ணுங்க...

உறவுகள் சில நேரங்களில் இனிமையாகவும் சில நேரங்களில் கடுமையாகவும் முறிந்துவிடுவதுண்டு. எந்த முறையில் பிரிந்திருந்தாலும், உங்களுக்கு அவர்களிடம் சிறிதளவு பரிவு இருக்கத் தான் செய்யும். உங்கள் உறவுமுறிந்த பிறகும் இந்த உணர்வு உங்களை அவர்களுக்கு அழைப்பு செய்வதற்கு கட்டாயப்படுத்திவிடும். உங்கள் உணர்ச்சி மதிக்கத்தக்கதாக இருந்தாலும், உங்கள் முன்னாள் காதலியை அழைப்பதற்கு சில வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அவர்களை நீங்கள் அழைத்ததற்கு சொல்லப்படும் காரணம் நம்பக்கூடியதாக இல்லையென்றால் அது உங்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி தவறான எண்ணத்தை உண்டாக்கிவிடும். ADVERTISEMENT உறவுமுறிவு என்பது இருவரது வாழ்விலும் கடினமான ஒன்றாகத் தான் இருக்கும். அதனால், நீங்கள் அவரை அழைத்ததற்காக சொல்லப்படும் வலுவான காரணம் அவர்களின் வலிகளுக்கு மருந்தாக இருக்க வேண்டும். உங்கள் உறவு சந்தோஷமான முறையில் முறிந்தாலும், அது கசப்பான வடுவைத்தான் விட்டு சென்றிருக்கும். அதனால், உங்கள் முன்னாள் காதலியை அழைப்பதற்கு முன், அவரை அழைத்ததற்கான வலுவான காரணத்தை சொல்ல தயார் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் மீண்டும் இணைவதில் எந்த தவறும் இல்லை. மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து சேர்ந்து வாழ்ந்தால் அதிலும் தவறு இல்லை. கலந்து ஆலோசித்து மறுபரிசீலனை செய்யலாம். Excuses To Call Your Ex உங்கள் முன்னாள் காதலியை அழைத்ததற்கு அற்பமான காரணமாகவோ அல்லது திட்டமிட்ட காரணங்களோ இருக்கலாம். அது நீங்கள் அவரை அழைத்தற்கான நோக்கத்தை பொறுத்து. நீங்கள் அவருடனான உறவை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், அவரின் உறவினர்களின் நலம், வேலை சம்பந்தமான விஷயங்கள் போன்ற வலுவான காரணங்களை தேர்வு செய்யலாம். வாழ்த்து இது உங்கள் முன்னாள் காதலியை அழைத்தற்காக சொல்லப்படும் சாதுரியமான காரணமாகும். அது அவருடைய பிறந்தநாள் அல்லது வேலை நிமித்த பதவி உயர்வு போன்ற காரணங்களாக இருக்கலாம். இந்த காரணம் குற்றமற்ற காரணமாக இருப்பதால் தவறாக எண்ண முடியாது. உறவினர்களின் நலம் பற்றி கேட்பதற்கு அவருடனான கடந்த கால உறவு பல உறவினர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கும். அவர்களின் உறவினர்களில் யாரேனும் உடல் நலம் சரியில்லாமல் இருந்தால், அதுவே நீங்கள் அவரை அழைத்ததற்கான வலுவான காரணமாக அமையும். நல்ல செய்தி தெரிவிப்பதற்கு உங்களுக்கு வெற்றி கிட்டிஇருந்தாலோ அல்லது ஏதேனும் நல்லது நடந்திருந்தாலோ அதனை தெரிவிப்பதற்கு அழைத்தீர்கள் எனக் கூறலாம். இது நீங்கள் அவரை அழைப்பதற்காக சொல்லப்படும் வலுவான காரணங்களில் ஒன்றாக இருக்கும். இது நீங்கள் இன்னமும் அவரை நண்பராக எண்ணுவதையும் உங்களின் வெற்றியின் போதும் அவரிடம் கொண்டுள்ள அக்கறையை தெரிவிக்கும். செய்தியை தெரிவித்தல் சில நேரங்களில் உங்கள் காதலிக்கு தெரிந்த முக்கியமான செய்தி பற்றி நீங்கள் கேட்டறிவதற்கு அழைத்ததாகக் கூறலாம். இது அவரை அழைத்ததற்கான சிறந்த காரணமாக இருக்கும். மேலும், இதன் மூலம் உங்களுக்கு வேண்டிய செய்தியை அறிவதற்கு அவர் உதவி செய்யலாம். இது இயல்பான முறையில் பேசுவதற்கு சந்தர்பங்களை ஏற்படுத்தும். உதவி உங்கள் உறவு இனிமையான முறையிலோ அல்லது கசப்பான முறையில் முறிந்திருந்தாலும், நீங்கள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது அழைத்தீர்கள் என்று சொல்லலாம். பெரும்பாலும் நேர்மறையான முறையிலேயே பதிலளிப்பார்கள். உங்களின் பணப் பற்றாக்குறை அல்லது உங்கள் பர்ஸை மறந்துவிட்டீர்கள் போன்ற குற்றமற்ற காரணங்கள் கூறி உதவி கேட்கலாம். மறுபரிசீலனை ஆம்! சில நேரங்களில் நீங்கள் அவரை மறுபரிசீலனை செய்து மீண்டும் உங்கள் வாழ்வில் இணைத்து கொள்ள விரும்பினால், அதனை ஒரு காரணமாகக் கூறலாம். அவர்களில் பதில் என்னவாக இருந்தாலும் உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. மாறி அழைத்துவிட்டீர்கள் எந்த காரணமும் இல்லையென்றால், இதனை கூறி விடலாம். வேறு யாருக்கோ அழைப்பதற்கு பதிலாக தெரியாமல் மாறி அழைத்து விட்டேன் எனக் கூறலாம். இது பெரும்பாலும் எந்த பிரச்சனையையும் உருவாக்காது.

Read more at: http://tamil.boldsky.com/relationship/2013/12/excuses-call-your-ex-004583.html

வீட்டில் பூச்சித்தொல்லையா இருக்கா?

வீட்டில் பூச்சித்தொல்லையா இருக்கா?

 
வீட்டில் நாம் குடியிருக்கிறோமோ, இல்லையோ, ஆனால் பூச்சிகள் மட்டும் ஆட்டம் பாட்டத்தோடு சந்தோஷமாக நன்கு வீட்டை உலாவிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் வருவது எறும்பு, பல்லி, கரப்பான்பூச்சி, கொசு போன்றவையே. அத்தகையவை வீட்டில் இருப்பதால் பெரும் தலைவலி ஏற்படுவதோடு, உண்ணும் உணவுப் பொருட்களில் ஏறி உண்டு, உடலுக்கு பல நோய்களை வர வைக்கின்றன. மேலும் அவற்றை அகற்ற வேண்டும் என்று எண்ணி, அதனை அழிக்க பூச்சி மருந்துகளை வாங்கி அடித்தால், நாம் வீட்டிலேயே இருக்க முடியாத அளவு மருந்து நாற்றமானது இருக்கிறது. இத்தகைய நாற்றத்தை தவிர்க்கவும், பூச்சிகள் வராமல் இருக்கவும் ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.

1. எறும்புத் தொல்லையை நீக்க...
வீட்டில் கிச்சனில் இருக்கும் சர்க்கரை, சாக்லேட் மற்றும் கழுவ போட்டிருக்கும் டீ கப்பில் எறும்புகளாக இருக்கிறதா? ஏனெனில் எறும்புகளுக்கு இனிப்புகள் மற்றும் மிச்சம் வைத்திருக்கும் பொருட்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சொல்லப்போனால் அதுவே அதன் சொர்க்கம், உணவு என்றும் கூட சொல்லலாம். அத்தகைய உணவுப் பொருட்களை வெளியிலேயே வைத்தால் போதும், பின் வீடே எறும்பு மயமாகிவிடும். இத்தகைய எறும்பை வராமல் தடுக்க, வீட்டில் இருக்கும் கிச்சனை தினமும் படுக்கும் முன் சுத்தம் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும். அவ்வாறு செய்தும் எறும்புத் தொல்லை நீங்கவில்லை என்றால், மாதத்திற்கு ஒரு முறை கிச்சன் முழுவதையும் மண்ணெண்ணெய் வைத்து துடைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் எங்கும் எறும்பு வருவதை தடுக்கலாம்.

2. பல்லி வராமல் தடுக்க...
வீட்டில் எந்த சுவற்றைப் பார்த்தாலும் ஒரு பல்லியாவது இல்லாமல் இருக்காது. அதற்கு நிறைய பேர் முட்டையின் ஓட்டை வீட்டின் மூலைகளில் வைத்தால் பல்லியானது வராது என்று நம்புகின்றனர். உண்மையில் அப்படி வைத்தால் வராது தான், ஏனெனில் அதில் இருந்து வரும் நாற்றத்தினால் பல்லியானது வராமல் தடுக்கலாம்.

3. கொசுக்களை அழிக்க...
கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் உணவைத் தான் உண்ணுகின்றன. ஆனால் கொசுக்களானது நமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடிக்கின்றன. பெரும்பாலும் கரப்பான்பூச்சிகள் மற்றும் எறும்புகள் வராமல் கூட கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால் கொசுக்கள் வராமல் இருப்பதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்காக நிறைய வீட்டுப் பொருட்கள், அதனை அழிக்க இருக்கின்றன. அவை,
- கற்பூரம் மற்றும் மண்ணெண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை மின்சாரத்தில் இயங்கும் மெசினான ஆல்-அவுட், குட் நைட் பாட்டிலில் ஊற்றி பிளக்கில் மாற்றிவிட வேண்டும். இதனால் கொசுவை வராமல் தடுக்கலாம்.
- தேங்காய் ஓட்டை எரிக்கும் போது வரும் புகையால் கூட கொசுவை வராமல் தடுக்கலாம்.

4. கற்பூரத்தால் பூச்சிகளை தடுக்கலாம்...
கற்பூரமானது ஒரு சிறந்த பூச்சிக் கொல்லிப் பொருள் என்று சொல்லலாம். ஏனெனில் இதில் சல்பர் இருப்பதால், பூச்சிகள் அதன் வாசனையில் இறந்துவிடும். மேலும் கற்பூரமானது ஒரு ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஃபங்கல் நிறைந்த பொருள். கொஞ்சம் கற்பூரத்தை எடுத்துக் கொண்டு, அதனை ஏற்றி வீடு முழுவதும் சுற்றி வந்தால், அந்த நாற்றத்திற்கு வீட்டில் இருக்கும் சிறிய பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும்.